Archive for July 2004

You are browsing the archives of 2004 July.

பாடப் புத்தகங்களில் குடியேறியப் பொய்கள்.

இந்தியாவின் கடந்த கால பாரதீய ஜனதா ஆட்சியில் சிந்தனை பயங்கரவாதம் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பரிவாரங்களால் கவனத்துடன் பரப்பப்பட்டது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அப்போதைய அமைச்சராக முரளி மனோகர் ஜோஷி (பாபர் மசூதி இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்) இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைகளை அல்ல, தலைமுறைகளையே தகர்த்துவிடும் தன்மை கொண்ட சிந்தனை பயங்கரவாதம் குறித்து நம்மில் பலருக்கு (படித்தவர்களுக்கே கூட) போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சம கால அச்சு [...]

தாஜ்மஹாலைக் கட்டியக் கலைஞர்கள் யார்…?

உலகின் ஏழாவது அற்புதமாக விளங்குகின்ற தாஜ்மஹாலை யார் கட்டியது என்று கேட்டால் அனைவரும் ஷாஜஹான் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கட்டிடக் கலைகளின் மகாராணி என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த தாஜ்மஹாலை வடிவமைத்து, அதன் ஒவ்வொரு கலையம்சத்தையும் மிகுந்த சிரத்தையோடு நிர்மாணித்த ஏராளமான கட்டிடக் கலைஞர்கள் யார் யார் என்பது இப்போது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்திய அகழ்வாராய்ச்சியினர் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்பமாக 17ம் நூற்றாண்டில் இந்த [...]

இலங்கை மகாண சபைத் தேர்தல்!

இலங்கையில் எட்டு மகாண சபைகளில் ஆறு மாகாண சபைகளுக்கானத் தேர்தல் ஜூலை 10ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தல் முழு அரசியல் ஸ்தாபனத்தைப் பற்றியும் வாக்காளர்கள் மத்தியில் பரந்த அதிருப்தி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் 55 சதவீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான வாக்களிப்பு 75-80 சதவீதத்திலும் ஒப்பிடும்போது மிகக்குறைவானதாக இருப்பதோடு, இது 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையில் வெளியான தேர்தலிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையாகும். சற்று மூன்று மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 2ம் தேதி [...]