<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="0.92">
<channel>
	<title>செய்திஅலைகள்.காம்</title>
	<link>http://seidhialaigal.com/news</link>
	<description>தமிழ் செய்தி ஊடகம்</description>
	<lastBuildDate>Wed, 19 Nov 2008 12:24:36 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	<!-- generator="WordPress/3.0.1" -->

	<item>
		<title>கேள்விக்குறியாக்கப்படும் பத்திரிக்கைச் சுதந்திரம்!</title>
		<description><![CDATA[அல் ஜசீரா! ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை! பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=28</link>
			</item>
	<item>
		<title>இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்</title>
		<description><![CDATA[சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தி அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட உதவ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்புக்கு அலி மனிக்ஃபான் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் கேட்டுக்கொண்டார். இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் (கோழிக்கோடு) அமைப்பாளரான அவர், புனித உம்ரா பயணத்திற்கிடையில் மக்காவின் நுழைவாயில் எனப் போற்றப்படும் ஜித்தா நகரில் நடைபெற்ற பல பத்திரிக்கை சந்திப்புகளிலும், பல்வேறு பிறை கருத்தரங்குகளிலும் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் தேதி புனித மக்கா நகரில் நடைபெறவிருக்கும் [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=27</link>
			</item>
	<item>
		<title>ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகம்</title>
		<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது! ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வாக்குப்பதிவுகள் ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதை குறிப்பதாக வாஷிங்டன் கூறிக்கொண்டாலும், 20,000 அமெரிக்க [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=3</link>
			</item>
	<item>
		<title>கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு சீனாவை சீர்குலைத்துள்ளது!</title>
		<description><![CDATA[சீனாவில் கிடைக்கின்ற மலிவு ஊழியத் தொழிலாளர்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக அதிவேகமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்ததால் நாட்டின் அடிப்படை உடகட்டமைப்பு சீர்குலைகின்ற அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த ஆண்டு மின்சார உற்பத்தி 16 சதவீதம் உயர்ந்து 650 மில்லியன் மெகவாட் மணி நேரமாக இருந்தாலும், தொழில்துறை சக்திக்கான தேவை அதிகரித்திருப்பதால் 31 மாநிலங்களில் 24 மாநிலங்கள் பெருமளவில் இருட்டில் விடுவதாலும், மின்சார வெட்டுக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன. [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=5</link>
			</item>
	<item>
		<title>மக்கள் தொகை &#8211; மாறிவரும் நிலைப்பாடுகள்.</title>
		<description><![CDATA[நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாகவும் &#8211; பிற பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகவும் இந்திய அரசாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுவது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும். இதையே மீடியாக்களும் முடிந்த அளவுக்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊழல்வாதிகளும், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத அரசியல் சட்டஅமைப்பும் ஒளிந்து கொள்வதற்குக் கிடைத்த உதவாக்கரை காரணம் தான் மக்கள் தொகைப் பெருக்கம் என்று நிரூபிக்கும் முகமாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பகத் தலைவர் ஏ.ஆர். நந்தா [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=14</link>
			</item>
	<item>
		<title>சவூதி அரேபியாவில் இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன்.</title>
		<description><![CDATA[இந்திய வெளியுறவுத் துறையின் இணைஅமைச்சர் திரு. E.அஹமது அவர்களின் சமீபத்திய சவூதி வருகையை தொடர்ந்து அவருடைய தூண்டுதலுக்கிணங்க சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதரகம் சவூதிவாழ் இந்திய மக்களுக்கு உதவும் பொருட்டும் இந்தியர்களின் நீண்டநாளைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பொருட்டும் -ஹெல்ப்லைனை- துவங்கியுள்ளது. 966-1-4881982 மற்றும் 4884697 போன்ற தொலைபேசி எண்களில் இந்தச் சேவையைப் பெறலாம். இந்தச் சேவையைத் துவங்கி வைத்துப் பேசிய சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதர் திரு. கமாலுதீன் அஹமது அவர்கள் -இந்தியர்களின் நீண்ட நாளைய [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=20</link>
			</item>
	<item>
		<title>தமிழ்நாடு-கும்பகோணம் தனியார் பள்ளிக்கூடத்தில் தீவிபத்து, 90 குழந்தைகளைக் கொன்றது.</title>
		<description><![CDATA[தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்தது நாடுமுழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் பதினைந்து ஆண்டுகால சந்தை சீர்தீருத்தங்களின் விளைபயன்களுள் ஒன்றாகும். இச்சீர்திருத்தங்கள் ஏற்கெனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையைத் தொடர்ந்து சீரழிவுக்கும், மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசலில் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் தமிழ்நாடு [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=15</link>
			</item>
	<item>
		<title>இந்தியா பட்ஜெட், ஆதரவு ஏழைகளுக்காகவா..? வர்த்தகர்களுக்காகவா..?</title>
		<description><![CDATA[காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கம் ஜூலை 8ம்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட், கிரமப்புற மற்றும் நகர்வாழ் ஏழை மக்களை ஏமாற்றுகின்ற கண்கட்டி வித்தையாக இருக்கிறது. அவர்களில் பலர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். முந்தைய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்தனர். நிதியமைச்சர் பழனிப்பன் சிதம்பதரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெருவர்த்தக நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் உறுதியளிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. முன்பு ஆட்சி [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=7</link>
			</item>
	<item>
		<title>வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!</title>
		<description><![CDATA[மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகள் தங்களது எண்ணை வளத்தினால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், தங்களுடைய செழுமையான வாழ்விற்கும் இந்த நூற்றாண்டில் வழித் தேடிக் கொண்டன. இந்த பிரதேசத்தின் பூமிக்கு அடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற கருப்புத் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து அதை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தையில் உச்ச விலையில் விற்பதற்கு தேவையான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் செய்தது மேலைநாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள் என்றாலும்,&#8230; இந்த எண்ணை உற்பத்தியைக் கொண்டு வெறும் [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=10</link>
			</item>
	<item>
		<title>பாரதப் பிரதமரின் பயோடேட்டா.</title>
		<description><![CDATA[அரைக்குடம் தளும்பும் நிறைக்குடம் தளும்பாது என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் என்னவென்றால் அதிகம் படித்தவர்கள் அடக்கத்துடன் செயற்கரிய செயல்களின் மூலம் தங்களது சாதனைகளை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி நிகழ்த்துவார்கள் என்பதுதான். இந்த பழமொழிக்கு நிகழ்கால உதாரணமாக சமீபத்தில் பெரும் பரபரப்புக்கிடையே அமைதியே உருவாக இருந்து பாரத தேசத்தின் உயரிய பதவியான பிரதம மந்திரிக்கான பதவிக்கு எதிர்ப்பே இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பொறுப்பாற்றி வரும் டாக்டர் மன்மோகன் சிங் ஆவார். இந்த பதவிக்கு வருவதற்கு முன் [...]]]></description>
		<link>http://seidhialaigal.com/news/?p=9</link>
			</item>
</channel>
</rss>
